காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதாக கூறி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வைரலான ஒரு வீடியோ இந்த பதிவில், முகத்தை மூடியவாறு, போலீஸ் என பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த சிலர் கையில் தடியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது காஷ்மீரில் நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இது காஷ்மீரில் நடக்கவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் எடுக்கப்பட்டதாகும்.
சிந்த் மாகாண காவல்துறையினர் மீது அவதூறு பரப்ப சிலர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ சிந்த் மாகாண போலீசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மே 11ந் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
Few Days back a video was made viral on Social media in which People in police uniform were shown torturing women while raiding a house.This video proved fake and it was designed to malign Sindh Police in general and Jamshoro Police in particular.#Sindhpolicedmc pic.twitter.com/QbQAY2CqKF
— Sindh Police (@sindhpolicedmc) May 11, 2019
இதன்மூலம் இந்த வீடியோ காஷ்மீரில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிராமல் இருப்பது நல்லது. ஒருவேளை பகிர நினைப்பவர்கள் அவற்றின் உண்மையை ஆராய்ந்து பின் அவற்றை பகிர்ந்து கொள்வது தவறான ஒரு செய்தி பரவுவதை தடுக்கும் மேலும் வீண் குழப்பத்தை தவிர்க்கவும் உதவும்.