தஞ்சாவூர் நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல்துறையின் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி.,யின் செயலைக் கண்டிப்பதாக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு…
தஞ்சாவூரில் நிர்மலா நகரில் விநாயகர் சிலை வைத்து இந்துக்களை தரக்குறைவாக பேசி காவல்துறை வண்டியில் ஏற்றிய தஞ்சாவூர் DSP யின் அராஜகச் செயலை வண்மையாகக் கண்டிக்கிறேன். அரசு அதிகாரிகள் இந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவது அதிகரித்து வருவது நல்லதல்ல.
ஆகஸ்ட் 15 அன்று தஞ்சாவூரில் நிர்மலா நகரில் தேசிய கொடி ஏற்றக் கூடாது என்று எழுத்துப்பூர்வமான உத்தரவிட்ட காவல்துறை இன்று விநாயகர் சிலை வைக்கத் தடை. வெட்கக்கேடு.