நாங்களும் தப்பு செய்துள்ளோம்… ஆனால் நீங்க செய்யக்கூடாது…
ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது தெலங்கானா ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள். ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்க கூடாது என்று சர்க்காரியா கமிஷன் தெளிவாக கூறியுள்ளது!
நாங்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரை சிலரை ஆளுநர்களாக நியமித்துள்ளோம்! அதை நாங்கள் மறுக்கவில்லை! ஆனால் மத்திய அரசு அப்பட்டமாக பாஜக நிர்வாகிகளை ஆளுநர்களாக நியமித்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறினார் ‘15 நாள் ஸ்பெஷலிஸ்ட்’ நாராயணசாமி!