முரசொலி நிலம் விவகாரம் தொடர்பில், டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
48 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமதாஸ், பாஜகவின் சீனிவாசனுக்கு திமுகவின் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பினார்.
முரசொலி பத்திரிகை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், பாமக., நிறுவுனர் ராமதாஸ், பாஜக., மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு திமுக., சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர தவறினால் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப் பட்டுள்ளது.