‘ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம்’ (ஒய்எஸ்ஆர் சட்ட நண்பர்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஜகன்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி செவ்வாய் இன்று ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இன்று தேசிய வழக்கறிஞர் தினம் தொடர்பாக ஆந்திர அரசு இந்த திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. அதேபோல் ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம் என்ற வெப்சைட்டையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெகன்.
இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக சட்டப் படிப்பு முடித்த சட்ட பட்டதாரிகளுக்கு தங்களது சட்டப் பணியில் நிலையாகும் வரை 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 5000 உதவித் தொகை அளிக்க உள்ளார்கள்.
2016 மற்றும் அதன் பிறகு தேர்வில் தேறிய சட்ட பட்டதாரிகளே இந்தத் திட்டத்திற்கு தகுதி உள்ளவர்கள் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.