நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது ரயில்வேத் துறை மற்றும் வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தைச் சென்றடைவதற்கு சற்று தாமதம் ஆனது. இதை அடுத்து அவர் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் வருகை குறைந்தது தொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். இதனை ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கும்போது மக்களவையில் உள்ளே இருக்க வேண்டும் என்பதால், நாடாளுமன்றத்திற்குள் அவர் ஓட்டமாக ஓடினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.