உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப் பட்டிருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலுக்காக பா.ஜ.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், அமைக்கப்பட்டுள்ள இப்பணிக்குழுவில், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நரேந்திரன், மோகன்ராஜூலு, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், நாகராஜன், நயினார் நாகேந்திரன், சிவகாசி பரமசிவம், வேத ரத்தினம், மகாலட்சுமி, எஸ்.எஸ்.ராமதாஸ், வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.