spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்திருமா போட்ட வழக்கு! அது எதுக்கு தெரியுமா?

திருமா போட்ட வழக்கு! அது எதுக்கு தெரியுமா?

- Advertisement -

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேருராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் மறு வரையறை செய்யப்படும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து திமுக எந்த வழக்கும் தாக்கல் செய்யவில்லை என திருமாவளவன் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திருமாவளவன் தானே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe