அமராவதியில் ஆறாத போராட்டத் தீ. பாதி மொட்டை பாதி மீசையோடு விவசாயிகள் போராட்டம்.
ஆந்திர பிரதேஷ் தலைநகர் அமராவதியில் விவசாயிகள் போராட்டத்தை விடாமல் தொடருகிறார்கள்.
அமராவதியில் இருந்து தலைநகரை மாற்ற வேண்டாம் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறார்கள். அதற்காக புதன்கிழமையன்று அமராவதி விவசாயிகள் புதிய வினோதமான முறையில் எதிர்ப்பை தெரிவித்தார்கள். பாதி மொட்டை பாதி மீசையோடு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
“மூன்று தலைநகர்கள் வேண்டாம்… அமராவதி மட்டும்தான் வேண்டும்!” என்று முழக்கம் எழுப்பினார்கள். ரத்தம் சிந்தினாலும் சரி அமராவதியை பாதுகாப்போம் என்றார்கள்.