திருவள்ளூரில் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே கொண்டு வந்து எரித்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
வாக்குப்பெட்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.