பெரியார் குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபல நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் நேற்று கொடுத்த செய்தியாளர் சந்திப்புதான் இன்றும் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது. அதேநேரத்தில் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
நடிகை குஷ்பு, மீரா மிதுன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தலைவர் எப்போவும் உண்மைய பேசிடுறாரு.. உண்மைய சொன்னா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல என்று தெரிவித்திருக்கிறார்
Thalaivar Eppavum Unmai ya Pesidraru ☺️
— Robo Shankar (@ActorRoboSankar) January 22, 2020
Unmai ya Sonna En Sila Perukku Eriuthu nu Therila ????????#IStandWithRAJINIKANTH