ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளதாக இன்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
நேற்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.எல்.ஏ கருணாநிதி ( பல்லாவரம் ), திமுக ஆட்சிக் காலத்தின்போது, ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :
திமுக ஆட்சியில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதுடன் சரி. ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை;மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அது தற்போது நடைமுறையில் உள்ளது. விரைவில் ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.