spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

போலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

- Advertisement -

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும் அரசுப் பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது! இந்தக் கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்த நோய்த் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்!

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும் கர்நாடகா” மகாராஷ்டிரா மற்றும் பல பகுதி களில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாகக் கூடும் அராஜகப் போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது!

ஏற்கெனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும் நிபந்தனைகளையும் உத்தரவுகளையும் பின்பற்றாமல் தில்லியில் தப்லீக் ஜமாத் கூட்டத்தை நடத்தியதன் விளைவு இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இவர்கள் கூட்டமாகக் கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்!!

இதை ஹிந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. அரசு இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் – என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe