spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தா.கி., என்ற செயல்வீரர்! 18ம் ஆண்டு நினைவேந்தல்!

தா.கி., என்ற செயல்வீரர்! 18ம் ஆண்டு நினைவேந்தல்!

- Advertisement -
tha krishnan

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர்.

இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை ‘தா.கி’ என்றே அழைத்தனர். இவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப் பட்ட போது, தமிழகமே அதிர்ந்தது.

20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது!

என்ன காரணம்? பின்னணி என்ன?

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். மேலும் பல உரசல்கள். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக தன் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் தா.கி.,யை வெட்டிக்கொலை செய்தனர். அந்த நாள் இன்று!

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களை எல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மறைத்து வைத்து மெளனம் காத்தவர் கருணாநிதி.

பக்கத்து நாட்டு பிரச்னையை, ‘தமிழினத்தின் தலைவர்’ என்று சிலரால் முன்னிறுத்தப் பட்ட கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதைக் கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதைக் கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பம் என கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா நிச்சயம் மன்னித்திருக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே போல் எந்த அதிகார பதவிக்கு ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவருமே இன்று அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்றுக் கிடக்கின்றனர்…

பகுத்தறிவின்பாற்பட்டு, தா.கி.,யின் ஆன்மா களத்தில் நின்று கொண்டிருக்கிறது!

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003) | நினைவேந்தல்

  • சமூக வலைத்தளப் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe