அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் தடை சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அசாமில் மாநிலத்தில் நாளை, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 126 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அசாமில் அமைதி மற்றும் வளர்ச்சியை பாஜக உறுதி செய்தது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் உள்ளன.
ஆனால் அவற்றில் மிகப் பெரியது, லவ் ஜிகாத் தடை சட்டம். தனது கட்சி லவ் ஜிகாத் தடை சட்டத்தை அசாம் மாநிலத்தில் அமல்படுத்தும் என்றார். ஒவ்வொரு பெண் கல்லூரி மாணவர்களுக்கும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக ‘ஸ்கூட்டி’ இலவசமாக வழங்கப்படும் என்றார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் சைக்கிள் வழங்கப்படும்.
இனவாத விலக்கு மற்றும் பிரிவினைவாதத்தை விரும்பும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை அடையாளம் காணவும், ரத்து செய்யவும் ஒரு கட்டுப்பாட்டு கொள்கையை அமல்படுத்துவதாகவும் கட்சி அறிக்கையில் உறுதியளிக்கிறது.
தனது கட்சி அரசை கிளர்ச்சியற்றதாகவும், பயங்கரவாதம் இல்லாததாகவும் மாற்றியதாகக் கூறினார்.
ஒவ்வொரு தொகுதியிலும் பி.எட் கல்லூரிகள் கட்டப்படும் என்றும், 2022ம் ஆண்டுக்கு முன்னர் இரண்டு லட்சம் அரசுப் பள்ளிகளும், எட்டு லட்சம் தனியார் வேலைகளும் உருவாக்கப்படும் என்றும் கூறினார்