சென்னை:
காவிரி தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லை என்று அதிமுக எம்.பி. மு.தம்பிதுரை தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சகம் கூட்டிய இந்தக் கூட்டமும் தேவையற்றது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்தை விமர்சித்துள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, அப்படியெனில், தமிழக அரசு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கு பெறுவதை இவர் ஏற்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டீவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது …
<blockquote class=”twitter-tweet” data-lang=”en”><p lang=”ta” dir=”ltr”>இன்று மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சகம் கூட்டியுள்ள கூட்டம் தேவையற்றது என்கிறார் தம்பிதுரை அவர்கள். அப்படியானால் தமிழக அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபெறுவதை இவர் ஏற்கவில்லையா?</p>— H Raja (@HRajaBJP) <a href=”https://twitter.com/HRajaBJP/status/972011616718831616?ref_src=twsrc%5Etfw”>March 9, 2018</a></blockquote>
<script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>