கர்நாடகாவில் குதிரை பேரம் துவங்கிவிட்டது.
குமாரசாமி அரசு பொங்கலுக்கு பிறகு நீடிக்குமா என்பது சந்தேகம். முன்னாள் கர்நாடக மந்திரி பலகவி ரமேஷ் பிஜேபிக்கு போகும் முடிவெடுத்து விட்டார்.
அவரும் அவரைச் சார்ந்த சில எம்எல்ஏக்களும் மகரசங்கராந்திக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு தாவுவார்கள் என்று கர்நாடக பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன.
அது குமாரசாமி தலைமையிலான அரசை ஆட்டம் காணச் செய்கிறது.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா சதானந்தகவுடா ஆகியோர் குதிரை பேரம் பற்றி ட்விட்டர் போர் துவங்கியிருக்கிறார்கள்.
திருவாரூர் இடைத் தேர்தலுக்கு முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் அது தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து திமுகவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கும்.
- தராசு ஷ்யாம்