பாகுபலி படம் மூலம் பலரது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நடிகர் பிரபாஸ் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் நிற்க வைக்கப் படவுள்ளார். ஆந்திர அரசியல் வட்டாரத்தை கலக்கி வரும் தகவல் இதுதான்!
இன்னும் ஓரிரு மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் படவுள்ளது. இந்நிலையில், தேசிய அளவில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேசியக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் மாநிலக் கட்சிகளோ கூடுதல் தொகுதிகளைப் பெற்று, தாங்களே ஆதிக்கம் செலுத்த தயாராகி வருகின்றன.
இந்நிலையில், கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்று சிக்கல் இன்றி நாட்டை ஐந்து ஆண்டுகள் வழிநடத்திய பாஜக.,வை இம்முறை வர விடக் கூடாது என்று அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. அதற்கு பல்வேறு கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பாஜக.,வை ஓரங்கட்ட முயன்று வருகின்றன. காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள திட்டமிட்டாலும், பொது நோக்கம் இல்லாமல் சுயநல நோக்கே மேலோங்கி இருப்பதால், காங்கிரஸுக்கு கூட்டணி இழுபறியில் இருக்கிறது!
அதே நேரம், தாங்கள் செய்த சாதனைகளையும் ஊழல் அற்ற நேர்மையான அரசையும், ஏழைகளுக்கு மறு வாழ்வு அளித்த பாஜக.,வின் நலத்திட்டங்களைச் சொல்லியும் பாஜக., பிரசாரம் செய்து வருகிறது. அதனால் வலுவான கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளை சிதறடிக்க ஏற்பாடு செய்து வருகிறது. பாஜக.,வுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், வேறு வகைகளில் பிரபலமானவர்களை நிறுத்தி ஆதரவைத் தேடி வருகிறது பாஜக.,
அந்த வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர ராவும் கூட்டணி போட்டுவிட்டனர். காங்கிரஸ் தனித்து களம் காண்கிரது. தெலுகு தேசம் தனித்து விடப் பட்டிருக்கிறது. இந்நிலையில், தங்களுக்கும் பலம் சேர்க்க பாஜக., எடுத்துள்ள ஒரு முயற்சியாக, மாபெரும் லிங்கத்தை தூக்கிக் கொண்டு இந்துத்துவ கருத்துகள் கொண்ட பாகுபலி படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் பிரபாஸை தங்கள் கட்சிக்கு ஆதரவாகத் திருப்ப பாஜக., முயன்று வருகிறது. ஆந்திரத்தில் சினிமா செல்வாக்கு எப்போதுமே உண்டு. பிரபாஸ் பாஜக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பட்சத்தில், அவரை ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஆந்திரத்தில் பாஜக.,வின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஆளும் தெலுகு தேசத்துக்கு அது மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்!
பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு தெலுங்கு நடிகர்.இவர் 1998 தேர்தலில் பிஜேபி சார்பில் காக்கிநாடாவில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நிலையில் பிரபாசை பாஜகவுக்கு கொண்டுவர கிருஷ்ணம் ராஜு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது
அவருக்கு ஆளுநர் பதவியை அளிக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்! அதுபோல் பிரபாசுக்கு எம்எல்ஏ சீட் ஏதாவது கொடுக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது! ஆனால் எந்த தொகுதியில் இருந்து அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுப்பது என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை
கிருஷ்ணம் ராஜு வயதானவர் மற்றும் மூத்த நபர் அவருக்கு உயரிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கட்சியில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதை ஏற்றுக் கொள்ளாமலும் இல்லை! ஆனால் பிரபாஸ் தற்போது நடிப்புத் துறையில் உச்சத்தில் இருக்கிறார் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டால் அது அவருடைய நடிப்பு தொழிலுக்கு பாதகமாக அமையும் என்று கருதப்படுவதால் இந்த வாய்ப்பை மறுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது!