புதிய தமிழகம் கட்சி பாஜக., கூட்டணியில் இணைந்துள்ளது. அது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி, தென்காசியில் போட்டியிடுகிறது! இதனை அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
மேலும், புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி! இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம், புதிய தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தென்காசியில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார்.
Puthiya Tamilagam joins NDA. To contest from Tenkasi. https://t.co/bcl5s60Xen
— Shyam Krishnasamy (@DrShyamKK) March 2, 2019
முன்னதாக, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சமுதாயத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் கிருஷ்ணசாமி. அதனை மதுரையில் நடைபெற்ற கூட்டத்திலும் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசி, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.
இதை அடுத்து தமிழக அரசு இதற்காக ஒரு குழு அமைதுள்ளது. இந்நிலையில், தே.ஜ.கூட்டணியில் இணைந்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.