சென்னை : நடிகர் கமலின் கட்சியில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா இன்று கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யத்திற்கு பெண்களின் ஆதரவு பெருகி வருவதாக கூறி உள்ளார்.
இதன் பின்னர் கமல்ஹாசன் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். எனக்குப் பிறகு கட்சித் தலைமை பதவிக்கு எனது மகளோ, மைத்துனரோ வரமாட்டார்கள்.
அரசியல் சௌகரியத்திற்காக வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்றார் கமலஹாசன்.
என்ன காரைக்குடி பார்ட்டியிலே கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியிலே கூப்பிட்டாகோ.. அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்…
செய்தி : மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா pic.twitter.com/Z9TBNgEV0N
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் (@mayavarathaan) March 8, 2019