திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் விரும்பி வலியுறுத்தி நேரடியாகக் கேட்ட மூன்று தொகுதிகளில் குஷ்புவுக்கு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல்கள் பகிரப் படுகின்றன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக., இவற்றில், மூன்று தொகுதிகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேண்டும் என்று வற்புறுத்தி பெறப் பட்டிருக்கிறது! அவற்றில், கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறதாம்.
இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரியில்
செல்லக்குமார் போட்டியிடுவார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால் திருநாவுக்கரசருடன் முட்டல் மோதலில் ஈடுபட்ட குஷ்புவுக்கு குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லையாம்! ராகுலை நம்பி அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி, பாஜக.,வையும் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தாலும், குஷ்புவுக்கு என்று குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லை என்கிறார்கள் காங்கிரஸில்!