இந்தத் தேர்தலில் முக்கிய இடம் பிடித்திருப்பது, இத்தனை நாட்கள் திமுக., செய்த துரோகங்களையும், இந்து விரோதத் தன்மையையும் வெளிப்படுத்தும் மீம்ஸ்கள்தான்.
செய்ததை சொல்லி வாக்கு கேட்பார்கள் சிலர் செய்யாததைச் சொல்லி வாக்கு கேட்பார்கள்! அதுபோல் இதையெல்லாம் நீ செய்தாயா என்று சொல்லி வாக்கு கேட்கும் சூழல் இப்போது தமிழகத்தில் எழுந்திருக்கிறது
புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனத்தை சிறிது மாற்றி இவ்வாறு கருத்தை தெரிவித்து வருகிறார்கள் சிலர்
ஆங்கிலேயன் பானர்மென்னை திமுகவாகவும் கட்டபொம்முவை மக்களாகவும் சித்திரித்து ஒரு மீம்ஸ் உலா வருகிறது அதில்… எங்களுடன் தீபாவளி கொண்டாடினாயா? சரஸ்வதிக்கு பூஜை செய்தாயா? மாட்டுக்கு பொங்கல் படைத்தாயா? இல்லை சபரிமலைக்கு தான் நாற்பது நாட்கள் விரதம் இருந்து சென்றாயா? மானங்கெட்டவனே எதற்கு கேட்கிறாய் இந்துக்களிடம் வோட்டு? என்ற கருத்தை விதைத்து மீம்ஸ் உலா வருகிறது
கட்டபொம்மன் ஸ்டைலில் பேசும் வசனமாக இதனை பலரும் சொல்லிப் பார்த்து, மேலும் மேலும் சேர்த்து பதிவிட்டு வருகிறார்கள்!