தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் அண்மைக் காலமாக திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இதை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து தென்சென்னை கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழக காங்கிரஸ் கட்சியில், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் கொடுத்துள்ளது… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் திருச்சியில் தனது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அண்மையில் தெரிவித்து வந்தார். திருச்சி திமுக.,வின் கே.என். நேரு உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவது குறித்தும், காங்கிரஸுக்கு திமுக., ஏன் பல்லக்கு தூக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.