February 8, 2025, 9:19 PM
27.1 C
Chennai

போலி பலாத்கார வழக்கில், பணம் பறித்த பிரபல யூ-டியூபர் கைது..

ரூ.80 லட்சம் வரை மிரட்டி பறித்த போலி பலாத்கார வழக்கில், டெல்லியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் (வயது 22). இவரது கணவர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவருக்கு 6.17 லட்சம் பின்தொடர்வோர் உள்ளனர். இந்த நிலையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (வயது 21) என்ற வாலிபர், நம்ரா மீது மிரட்டி பணம் பறித்தல் புகாரை போலீசில் அளித்து உள்ளார். இதன்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தினேஷ் சில மாதங்களுக்கு முன்பு நம்ராவை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளார். நம்ராவுடன் பெனிவாலும் இருந்துள்ளார். நம்ராவின் சேனலில் தனது விளம்பர நிறுவனம் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் என தினேஷ் கேட்டுள்ளார். அதற்கு நம்ரா ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளார். அதன்படி, தினேசும் கொடுத்துள்ளார். பின்பு, நம்ரா ரூ.50 ஆயிரம் கேட்டு வாங்கியுள்ளார்.

ஒரு சில நாள் சென்ற பின்னர், விளம்பர வேலை எதுவும் நடைபெறாத நிலையில், நம்ராவிடம் தினேஷ் அதுபற்றி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நம்ரா, தினேசை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர், அவர்கள் நண்பர்களானார்கள் என புகாரில் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டில், நம்ரா காதிர் மற்றும் மணீஷ் உடன் சேர்ந்து தினேஷ் கிளப் ஒன்றில் விருந்தில் பங்கேற்க சென்றுள்ளார். இரவில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலையில், எழுந்த தினேஷிடம் அவரது வங்கி அட்டைகள் மற்றும் கைக்கெடிகாரம் உள்ளிட்டவற்றை நம்ரா கேட்டுள்ளார். தராவிட்டால் போலியான பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் தினேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், தொடர்ந்து மிரட்டி ரூ.80 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் மற்றும் பரிசு பொருட்களை தினேஷிடம் இருந்து நம்ரா கறந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரூ.5 லட்சம் தொகையை தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து தினேஷ் எடுத்துள்ளார். அவ்வளவு பணம் எதற்கு என தினேஷின் தந்தை கேட்டதும், உண்மையை தெரிவித்து உள்ளார். இதன்பின் அவர் என்னை போலீசில் புகார் அளிக்க அழைத்து சென்றார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நம்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகிற வெள்ளி கிழமை வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய மணீஷை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.80 லட்சம் பணம், பரிசு பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories