March 27, 2025, 6:02 PM
31.6 C
Chennai

வைகுண்ட ஏகாதசியில்  தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் ..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, மாநகர போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இறை தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போன்ற திருவிழாக்களுக்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி எவ்வித அசம்பாவிதமுமின்றி சிறப்பாக நடத்தியது.

இது போல வைகுண்ட ஏகாதசி விழாவையும் சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 இணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், வைணவ திருக்கோயில்கள் அல்லாத பிற கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நாளை முதல் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட வசதியாக ஒழுங்குப்படுத்தும் பணியினை  மேற்கொள்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியான இன்றைய கூட்டத்தில்  பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய வரிசைமுறை நீட்டிக்கவும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி,  20 இடங்களில் தற்காலிக கழிப்பிட வசதிகள், 4 இடங்களில் மருத்துவ முகாம்களும், 2 இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்களும், அவசர ஊர்திகளும் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் மூலம் சுழற்சி முறையில் 150 தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளவும்,  காவல் துறையின் மூலம் பாதுகாப்பு பணியில் 1500 காவலர்களை கொண்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு காவலர்களுடன் 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாடவீதிகளை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. என்.கே.டி. பள்ளி மற்றும் வெலிங்டன் பள்ளி வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாளன்று பக்தர்களுக்கு லட்டு மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படும். திருக்கோயில்கள் மூலம் செய்யப்பட்டுள்ள இத்தகைய வசதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.இக்கூட்டத்தில்  சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி, காவல் உதவி ஆணையர் சார்லஸ் சாம் ராஜதுரை, ஜெ.சிவகுமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories