February 16, 2025, 8:28 PM
28 C
Chennai

அதிமுக அரசின் நாடகம் கலைந்து விட்டது – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு மின் திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் தவறியதன் பயனாக கடந்த 9 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் அதிக அளவில் மின்னுற்பத்தி செய்யப்படும் போது சில மாதங்கள் மட்டும் மின்வெட்டு குறைவதும், அதன்பின் மீண்டும் மின்வெட்டு உச்சத்தை அடைவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைத்ததால் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. கடந்த 21–ந்தேதி 365 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இது 23–ந்தேதி 2333 மெகாவாட் ஆகவும், 24–ந்தேதி 2171 மெகாவாட் ஆகவும் அதிகரித்தது.

நேற்று அதிகபட்சமாக 975 மெகாவாட் மின்வெட்டு நிலவியது. தமிழகம் முழுவதும் இன்றும் கடும் மின்வெட்டு நீடிக்கிறது. காற்றாலைகள் மூலம் 2,000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரம் கிடைத்த போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மாறாக காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட்டுக்கும் கீழ் குறையும் போது மின்வெட்டு அதிகரிக்கிறது.

மின் தேவையை சமாளிக்கும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும், காற்றாலைகள் தான் கைகொடுக்கின்றன என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.

நேற்று முன்நாள் 24 ஆம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவை 13,058 மெகாவாட் ஆகும். ஆனால், ஒட்டு மொத்தமாக 11,633 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்த மின்சாரத்தின் அளவு 4422 மெகாவாட் (அனல் மின்சாரம் 2885, நீர் மின்சாரம் 1262, எரிவாயு மின்சாரம் 275 மெகாவாட்) மட்டும் தான். நெய்வேலி மற்றும் மத்திய மின்தொகுப்பிலிருந்து 2196 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது.

இவை தவிர 4731 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தில் 799 மெகாவாட் மின்சாரம் 6 நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

3219 மெகாவாட் அதிகபட்சமாக ரூ.6.00 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. 713 மெகா வாட் மின்சாரம் மட்டுமே குறைந்த விலையில் காற்றாலைகளிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்றைய மின்னுற்பத்தி நிலவரமும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்திருக்கிறது.

ஒரு மாநிலம் சொந்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிக மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதற்காக வெட்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி விட்டதாகக்கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட சொந்தமாக திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் 10,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ஆகிய இரு மின் திட்டங்களுக்கு மட்டும் தான் ஒப்பந்தம் விடப்பட்டது.

அவற்றிலும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. மற்றொரு எண்ணூர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் தீவிர மடையவில்லை.

உடன்குடி மின்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஒப்பந்த நடைமுறையையே ரத்து செய்ததன் மூலம் அத்திட்டம் மேலும் தாமதமாகும் நிலையை ஏற்படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். மின்திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பரங்கள் மூலமாக மாயையை ஏற்படுத்தி வந்த அ.தி.மு.க. அரசின் நாடகம் இப்போது கலைந்து விட்டது என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Entertainment News

Popular Categories