January 25, 2025, 2:54 PM
28.7 C
Chennai

அதிமுக அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என கூறியது வேதனை அளிக்கிறது : ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் எழுச்சி பயணத்தில் மதுரையில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தேனி மாவட்டம் புறப்பட்டு சென்றார்.

தேனிக்கு புறப்படும் முன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் எனது எழுச்சி பயணத்தை தடை செய்வதற்காக மதுரைக்குள் நுழைய தடை விதித்தனர். நான் நடைபயிற்சி செய்வதாக இருந்த பூங்காவிற்கும் பூட்டு போடப்பட்டது. எனது பயணத்தை அவர்கள் தடை செய்திருந்தால், தடையை மீறி இந்த பயணத்தை நடத்த வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பல்வேறு தடைகளை மீறி இந்த பயணம் எழுச்சிகரமாக நடந்து கொண்டுள்ளது. தொடர்ந்து பயணம் நடைபெறும். எனது 2ம் கட்ட பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தமிழக அரசு மட்டுமின்றி மதுரை மாநகராட்சியும் குடிநீர், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை முறையாக வழங்குவதில்லை .

மேலும் இலவச பொருட்கள் எங்களுக்கு வேண்டாம். இலவசங்களை அடகு வைத்து கணவன்மார்கள் மது குடித்து விடுவதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், பெண்களும் குறைகூறி உள்ளனர்.

சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என பேசி உள்ளது வேதனை அளிக்கிறது.

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

மதுவிலக்கு கொண்டு வரப்படுமா, வராதா என்பது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்டாலின் கூறினார் .

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.