ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி.
தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2–வது பரபரப்பு மிக்க விமான நிலையம் உள்ளது. துறைமுகம் 3–வது பெரிய தலமாகும் .
ஸ்பெயின் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக கடலோனியா இருந்து வருகிறது. இது தன்னாட்சி உரிமை பெற்றது. 75 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதி மக்கள் தாங்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இதனால் அங்கு பல கட்ட போராட்டங்கள் நடந்தன. அதை தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது.
அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ஸ்பெயினில் இருந்து பிரிவது என்று கருதுபவர்களே அதிக அளவில் வாக்களித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து கருத்து வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்தர்மாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 2017–ம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் 2 ஆக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.