May 12, 2025, 5:31 PM
35 C
Chennai

ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 6,602 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 69 திட்டப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், பரங்கிப்பேட்டை, குமராட்சி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 17 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட, குடியிருப்புகள் மற்றும் 70 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கு 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம்; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கு 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ள பாளையம், காஞ்சி கோயில், நள்ளம்பட்டி, பெத்தம் பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் சென்னிமலை, பெருந்துறை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 492 ஊரகக் குடியிருப்புகளுக்கு 123 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம். தேனி மாவட்டம், கடமலைக் குண்டுமயிலாடும்பாறை மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 16 ஊரகக் குடியிருப்புகளுக்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் என மொத்தம் 195 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களினால் 4 லட்சத்து 9 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு இயக்கம், புதிய வீராணம் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், போன்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பல்வேறு கால கட்டங்களில் எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இத்தகைய முன்னோடி முயற்சிகளினால் சென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீராதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய நீராதாரங்களும், குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகரின் வருங்கால குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காகவும், நீராதாரங்களை பாதுகாத்து, சீரமைப்பதற்காக, நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தின் கீழ், பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள், அரசு கட்டடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பெரும் வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடிவமைத்து நிர்மாணித்தல் மூலம் மேம்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரில் 15 பெரும் வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த வளாகங்களில் மாதிரி பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த இயக்கத்தின் மேற்குறிப்பிடப்பட்ட மாதிரி பணிகள் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மிதிவண்டிகளின் பயன்பாட்டை, ஊக்குவிக்கும் வகையில், மிதி வண்டிகளுக்கென தனிப்பாதைகள், மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதி வண்டிகள் பயன்பாட்டு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான, வசதிகளை உள்ளடக்கிய மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்திற்கான தனித்தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு, 10 நகராட்சிகள் மற்றும் 214 பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு, மேலாண்மை பணிகள் 69 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்த எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதிகளுக்கிடையே ரயில்வே சந்திக்கடவுகள் முறையே 2ஏ மற்றும் 2பி ஆகியவை அமைந்துள்ளன. இந்த இரண்டு சந்திக்கடவுகளிலும் நாளொன்றுக்கு மொத்தம் 14 முறை ரயில் போக்குவரத்திற்கு ஏதுவாக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நிறுத்தப்படும் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 42,000 என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தின் தொழிற் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், பொது மக்களின் சிரமத்தை நீக்கும் வகையிலும், கால நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற் கொண்டும், மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எண்ணூர் நெடுஞ்சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கின் வாயில் முதல், வைத்தியநாதன் மேம்பால சந்திப்பிற்கு முன்னர் வரை மேம்பாலம் அமையும். இதே போன்று, மணலி சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கு சந்திப்பின் மேம்பாலத்தில் தொடங்கி தற்போதுள்ள தரைப்பாலத்திற்கு முன்னர் முடியும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள 42 பகுதிகளில் 36 பகுதிகளுக்கு குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 பகுதிகளுக்கு கழிவுநீர் அகற்றும் வசதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மற்ற பகுதிகளுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் திட்டங்களை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைளின் ஒரு பகுதியாக சென்னை மாநகரத்துடன் தெற்கு பகுதியில் இணைக்கப்பட்டுள்ள 11 பகுதிகளான பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஜல்லடாம் பேட்டை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்துரைப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் கொட்டிவாக்கம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு சோழிங்கநல்லூரில் கூடுதலாக நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய புதிய கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் 65 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய வகையிலான இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளால் தென் சென்னை பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள். சென்னை மாநகரின் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மகாகவி பாரதியார் நகர், புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், வியாசர்பாடி, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பட்டினப்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், அரும்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மொத்தம் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு புதிய குழாய் பதிக்கும் பணிகள் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இம்மண்டலத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், ஏழை எளிய மக்கள் ஆவர். எனவே, சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 119 தார் சாலைகள் மேம்படுத்தப்படும். 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளின் பெயர் பலகைகள் நிறுவப்படும். 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் 12 பூங்காக்கள் சீரமைக்கப்படும். 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 20 பள்ளிக்கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 31 பொது கழிப்பிடங்கள் நவீனப்படுத்தப்படும். 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 18 சத்துணவு மையங்களில் அபிவிருத்தி பணிகள் செயல்படுத்தப்படும். 1 கோடி ரூபாய் செலவில் மயான பூமி மற்றும் இடுகாடு புனரமைக்கப்படும். மேலும் சலவைக் கூட கட்டடங்களில் அபிவிருத்தி பணிகள் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுகாதார மையங்கள் அபிவிருத்தி பணிகள் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்படும். 6,000 எண்ணிக்கையிலான எல்.இ.டி மின் விளக்குகள் 15 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்படும். மொத்தத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1,260 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 750 பேருந்து நிறுத்தங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிதியாண்டில் எஞ்சியுள்ள 510 பேருந்து நிறுத்தங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிழற் குடைகள் அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  கழுத தேஞ்ச கதையா மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்! இனி வெறும் எஞ்சின் மட்டும் ஓடுமோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

Entertainment News

Popular Categories