சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி அக்டோபர் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், மத்திய போக்குவரத்து துறை செயலாளர் விஜய் ஷிப்பர் தலைமையில் இன்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
அதேசமயம் கடைசி முயற்சியாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் நாளை மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.