May 12, 2025, 5:41 PM
35 C
Chennai

அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!?

கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.

வேலியே பயிரை மேயும் சம்பவமாக அமைந்த இது குறித்துக் கூறப்படுவதாவது…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் எண்ணும்போது உண்டியலில் கிடந்த தங்க நகைகள் இருந்த கைப் பையை தனது பாக்கெட்டில் செருகிச் சென்றுள்ளார் தேவசம் அலுவலக அதிகாரி ஜீவா என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவர் திருக்கோயில் பணியாளர் சங்க மாநில தலைவரா உள்ளார் என்பது அந்தச் செய்தி.

சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று உலா வருகிறது. வாட்ஸ் அப் மூலம் பரவும் அந்த வீடியோவில், கோயில் உண்டியலில் காணிக்கையாகப் போடப் பட்ட நகைகள், பணங்கள் உள்ளிட்டவை எண்ணப் படும் போது, நின்று கண்காணித்துக் கொண்டிருந்த கோவில் அலுவலக அதிகாரி, ஒரு கட்டத்தில் நகைப் பை ஒன்று மஞ்சளாக இருப்பதை எடுத்து, அதனுள் பிரித்துப் பார்த்து, அது என்ன என்று ஆராய்வது போல் காட்டி, அப்படியே அதை மடித்து தனது பாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் கையை உள்ளே மறைத்தபடி, சற்று அங்கும் இங்கும் பார்த்து இயல்பாகக் காட்டியபடி, பின்னர் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல் அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம்.  தற்போது தமிழக ஆலயங்களில் திருடி கொள்ளை அடிக்கப் பட்டு வேற்று நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட திருக் கோயில் சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பலர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடந்த போது, அதுவும் வீடியோ பதிவு செய்யப் பட்ட நிலையில், இது போன்ற துணிச்சலான திருட்டு சம்பவங்கள் நடக்குமேயானால் இதற்கு முன் எவ்வளவு கொள்ளைகள் நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.

ALSO READ:  ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

இது போன்ற திருட்டுக்களை தடுக்க வேண்டும் என்று கூறும் அன்பர்கள், இவை எல்லாம் கணக்கிலேயே வராதவை என்பதால் அதிகாரிகளே திருடிச் செல்ல வசதியாக அமைந்து விடுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு குமரி மாவட்ட இந்து சமய அறிநிலைய துறையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

Entertainment News

Popular Categories