இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று வேலூர் வழியாக காரில் சென்றார். அப்போது தொண்டர்கள் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினால், 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனிடையே ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள் அவருடன் போட்டோ எடுக்க முயற்சித்தனர்.ரூ.100 கொடுத்தவர்களுடன் மட்டும்
அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் போட்டோ எடுக்க வைகோ அருகில் சென்றார். அப்போது ”காசு இல்லையா, அப்போ போட்டோ எடுக்க முடியாது” என அவரை தள்ளி விட்டார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
MDMK general secretary Vaiko @mdmkiw turns away a party cadre for not paying Rs. 100 for photo/selfie with him at Ambur @NewIndianXpress pic.twitter.com/pfid8fWlFm
— Sivakumar_TNIE (@sivakumarie) August 14, 2019