புளிப்பு,இனிப்பு ,குளிர்ச்சி ம்ற்றும் சூடான பொருட்களைச் சாப்பிடும் போது ஏற்படும் பல்கூச்சத்திற்கு காலை, இரவு திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ) பவுடரைக் கொண்டு பல் தேய்த்து வரவேண்டும்.
பல்லில் சொத்தை ஏற்ப்பட்டுக் குழிவிழுந்து வலியுடன் வீக்கமும் இருந்தால் இரவு படுக்கும் முன் மஞ்சள் தூளை சொத்தை துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வந்தால் வலியும் வீக்கமும் நீங்கும்.வேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக எடுத்து இரவு தினமும் வாய்க்கொப்பளித்து வந்தால் பல்வலி வராது பல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.