தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவன் சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளான்.
மேற்கு வங்க போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த அசதுல்லா ஷேக் என்ற ராஜா கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
சென்னையில் கட்டடத் தொழிலாளி என்ற போர்வையில், அவன் சென்னையில் பதுங்கியிருந்தது மேற்கு வங்க போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவனைக் கைது செய்தனர் போலீஸார்.
ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் அசதுல்லா ஷேக் என்று போலீஸார் கூறினர்.