பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என்று நடிகர் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் பள்ளிக்கரணையில் இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்ற இளம் பெண் சுபஸ்ரீ, சாலையில் நடுவே கட்டப் பட்டிருந்த பேனர் விழுந்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்து, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்ததை அடுத்து தொண்டர்களுக்கு நடிகர் விஜய் இந்த அறிவிறுத்தலை வழங்கியுள்ளார். #ActorVijay#NoMoreBanners
பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பேனர் வைக்க கூடாது என்று தனது ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.