
இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷப்ரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.
இலங்கையின் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபயே ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது.
அதேபோல், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அனுரா குமாரா திஷனாயகே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.