இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் யை பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசயுள்ளார்.. வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த சந்திப்பில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இந்நிலையில், நாளை மாமல்லபுரம் செல்லவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..
Chinese President Xi Jinping to visit Mahabalipuram near Chennai in the second week of October for the second informal summit with PM Narendra Modi. (file pic) pic.twitter.com/bSBnLZl7Jq
— ANI (@ANI) October 2, 2019