சிவகாசி அருகே ஜமின்சல்வார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். அந்த பகுதி மக்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடிவிபத்தில் சிக்கி முத்துபாண்டி என்பவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆலையில் இருந்த ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது.