சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ” நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.