மத்திய அரசின் சாகித்ய அகாடமி கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.
சென்ற ஆண்டில் தமிழில் சிறந்த நாவலாக `சூல்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை எழுதிய சோ.தர்மன் அவர்களுக்கு விருது அறிவித்தது. அதேபோல, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவல் `நிலம் பூத்து மலர்ந்த நாள்’. இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுது, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. மேலும், பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது.
கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தார்.
தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கே.வி.ஜெயஶ்ரீ
இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும்.
தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விருது விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.