மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது
வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம்.
அவர் பதிவிடும் காணொளிகள் மிகவும் வைரலானதாகவே இருக்கும். அவ்வகையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளியை சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மலைப்பாம்பு ஒன்றின் சீராக நகரும் தன்மையை பதிவு செய்திருந்த அவர், மிகவும் அற்புதமான முன்னேற்றம் என குறிப்பிட்டிருந்தார். எப்போதும் போல் அவரது இந்த பதிவும் சமூகவலைதளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Python slithering along a palm tree. Great improvisation? pic.twitter.com/zMckpbGD65
— Susanta Nanda IFS (@susantananda3) July 27, 2020