இன்று ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரம் சஷ்டி திதி. ராகு மிதுனத்தில் உள்ளதால் நாம் அனைவரும் மாலை 4.30 மணி முதல் ராகு காலம் நேரத்தில் முருகக் கடவுளை ஒரு தாம்பாள தட்டில் விபூதியை பரப்பி அதில் கருப்பர் கூட்டத்தினரின் பெயரையும் அவர்களுக்கு துணை போகும் நபர்களின் பெயர்களையும் எழுதவும்.
தாம்பாள தட்டிற்கு மேற்புறம் முருகனை அலங்கரித்து பலகையின் மீது வைத்து இரு புறங்களிலும் ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றிய பின் ஊது வத்தியை ஏற்றிய பின் சஷ்டி கவசத்தை 36 தடவை நிதானமாக உச்சரிக்கவும்.
முருகனிடம் தாங்கள் எதற்காக இப் பூஜையை மேற் கொண்டிருக்கிறோம் என்பதை சங்கல்பம் செய்து கொள்ளவும். பூஜை முடிந்ததும் கற்பூர தீபாராதனையைக் காட்டிய பின் தாம்பாள த்தில் எழுதிய கயவர்களின் பெயரை அழித்துவிட்டு அவ் விபூதியை ஒரு பிடி கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வடக்கு திசையை பார்த்து இக்கொடியவர்கள் ஒழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவ் விபூதியை ஊதி விடவும்.
அதன்பின் இவர்களின் கெதி என்னவாகப்போகிறது என்பதை கண்கூடாக இவ்வுலகம் பார்க்கும்.
வெற்றி வேலன் நம் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்பான்.
- சமூக வலைத்தளப் பகிர்வு