தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் இன்று 67 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது
சென்னையில் இன்று 989 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை153616 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா காரணமாக இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 33 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரையிலான கொரானா உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக அதிகரித்துள்ளது!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,525 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்