காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக கடிதம் எழுதிய குஷ்பு இன்று, தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களக பாஜக.,வில் சேர்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை குஷ்புவின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது இதை அடுத்து, குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார்
தொடர்ந்து, இன்று பிற்பகலே பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகை குஷ்பு. பாஜக தேசியச் செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்!
பாஜக.,வில் இணைந்த பின்னர் பேசிய குஷ்பு, நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க மோடி போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன்! தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயல்பட உள்ளேன்! பாஜக.,வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி, நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார்… என்று கூறினார்.
பாஜக., தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தில்லி பாஜக., அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.
குஷ்பு இணைந்தது குறித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன், ‛தமிழகத்தில் பாஜக. கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சியினர், இளைஞர்கள் பாஜக.,வில் இணைகின்றனர். தமிழகத்தில் பாஜக.,வின் ஆட்சி வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு பாஜக.,வில் இணைந்திருக்கிறார். அவரை பாஜக., சார்பில் வரவேற்கிறேன்.. என்றார்.
அதன் பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது… பாஜக.,வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார். மோடி மாதிரியான தலைவரால் மட்டுமே நாடு முன்னேற முடியும். ஆளும்கட்சியை விமர்சிப்பதே எதிர்கட்சிகளின் விதி . காங்கிரசில் இருந்த போதும் நான் பாஜக.,வை ஆதரித்து பேசி உள்ளேன். நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜக.,வில் இணைகிறேன். மாற்றம் என்பது இயல்பு. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக., வெற்றி பெற சிறப்பாக செயல்படுவேன் என்றார்.
தில்லி பாஜக., அலுவலகத்தில் வைத்து, அக் கட்சியில் இணைந்துள்ள குஷ்புவை பாஜக., நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.