கொரோனா விழிப்புணர்விற்காக குக்கூ பாடலை மாற்றி பாடிய சிறுமி. தற்பொழுது வைரலாகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஊரடங்கு அறிவித்துள்ளது அரசு. இருந்தும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும் ஆக்ஸிஜன் இன்றியும் மக்கள் அவதி பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பல காவலர்கள், தீயணைப்பு படையினர் போன்றோர் குக்கூ குக்கூ பாடலை விழிப்புணர்வு வீடியோக்களாக வெளியிட்டனர். மலையாளத்தில் காவலர்கள் பாடி அந்த வீடியோ வைரல் ஆனது. அதேபோல் தீயணைப்பு படையினர் ஆடிய டான்ஸும் வைரலானது.
இந்நிலையில் ஒரு சிறுமி இந்த பாடலை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரிகளாக மாற்றி பாடியுள்ளார் அது தற்போது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. வரியும் பாடலும் அருமை. நாமும் நம் பாராட்டை இந்த வீடியோவிற்கு லைக் போடுவதன் மூலம் தெரிவிக்கலாமே…