― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?திருவானைக்கா கோயில் பிரசாத ரேட்... ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயிடுச்சே! ‘விடியல்’ எப்போ?

திருவானைக்கா கோயில் பிரசாத ரேட்… ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயிடுச்சே! ‘விடியல்’ எப்போ?

- Advertisement -

ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் – அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.

மேலும் மிக சிறிய கன்டெய்னர் பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை மிக அதிகமாக நாற்பது ரூபாய் எனவும், சர்க்கரை பொங்கல் நாற்பது ரூபாய், வடை பத்து ரூபாய் என மிக அதிக அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய திருக்கோவில்களில் பதினைந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் திருக்கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.

ஆனால் மற்ற திருக்கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.ஆனால் திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிரானது.

மேலும் மேற்படி பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்காவல் திருக்கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…?

மேலும் மேற்படி பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை.
திருக்கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள திருக்கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் கன்டெய்னரில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனை.

எனவே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் @PKSekarbabu, ஆணையர் மற்றும் திருக்கோவில் EO உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் என்பது பக்தி வேண்டி தான். வர்த்தக மையமாக மாற்ற கூடாது. ஜெய்ஹிந்த்…

  • புகழ் மச்சேந்திரன், திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version