கென்யாவில் தண்ணீர் குடிக்க சென்று பள்ளத்தில் விழுந்த ஒரு சிங்க குட்டியினை அதன் தாய் சாமர்த்தியமாக காப்பாற்றியது .
கென்யா காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காகச் சென்று குட்டி சிங்கம் ஒன்று பாதை தெரியாமல் அங்குமிங்கும் தவித்து கொண்டிருந்தது.
இந்நிலையில் தனது தாயை நீண்ட நேரம் அழைத்துக் கொண்டிருந்த சிங்கக் குட்டி ஒரு கட்டத்தில் தண்ணீரில் விழப்போனது.
அதற்குள் சிங்கக் குட்டியின் தாய், அதனை சாமர்த்தியமாக தனது வாயால் கவ்வி பிடித்து காப்பாற்றியது. இதனையடுத்து தாய் சிங்கம் அதனை பிற குட்டிகளுடன் சேர்த்தது.