
தனது மகள் தொடங்கியுள்ள Hoote App-க்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், “நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.
இரண்டாவது, என்னுடைய மகள் செளந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE*என்ற App-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்.
அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் “Hoote App” மூலமாக பதிவிடலாம்… இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான Hoote App-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். அன்புடன் ரஜினிகாந்த்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தாதா சாகிப் பால்கே விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. விருது வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமளிக்கிறது என்றும் விருது வாங்கிய பிறகு மீண்டும் உங்களை சந்தித்து பேசுகிறேன் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து, நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருக்கிறது என வெளியிட்டுள்ளார்.
🙏🏻🇮🇳 pic.twitter.com/vkTf6mxYUu
— Rajinikanth (@rajinikanth) October 24, 2021