28-05-2023 4:10 PM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு...
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்பனை..!

    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார். ரூ.25 கோடி திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கின. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேர் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே திருமணத்தை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை டைரக்டர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

    இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். கட்டுப்பாடுகள் திருமணம் நடக்கும் அரங்குக்குள் செல்போன் கொண்டு வரவும் புகைப்படம் எடுக்கவும் தடை விதித்துள்ளனர். அழைப்பிதழ் வைத்து இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வாயிலில் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தி நடிகை கத்ரினா கைப் திருமணத்தை தனியார் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது போல் நயன்தாரா திருமண ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் விருந்தினர்கள் பட்டியலை கையில் வைத்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது உள்பட அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்கள்.

    திருமணம் இந்து முறைப்படி நடந்தது.திருமணத்தில்ரஜினிகாந்த் நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 200 பேர் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிரஞ்சீவி, இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்த நிலையில் அவர்களில் பலர் திருமணத்துக்கு வந்திருந்தனர்‌.

    இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பை விக்னேஷ் சிவனிடம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது. இதை தனது திருமண பரிசாக கருதுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார். கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ள இடத்தை திருமண வேலைக்கு இடையிலும் அரசு அதிகாரிகளுடன் நேற்று விக்னேஷ் சிவன் பார்வையிட்டார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,025FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக