May 19, 2025, 11:23 PM
29.2 C
Chennai

அகமதாபாத் – மும்பை 491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்

அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது இந்த ரயிலின் வேகம் 52 விநாடிகளில் 100 கிலோ மீட்டரை தொட்டது. இதற்கு முந்தைய வந்தே பாரத்ரயில் 54.6 விநாடிகள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு இடைநிற்றல் இல்லாமல் செல்வதற்கு (491 கி.மீ.) 5 மணி நேரம் 14 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அதேநேரம் மும்பையிலிருந்து திரும்பிய அந்த ரயில் 5 மணி நேரம் 4 நிமிடங்களில் அகமதாபாத்தை அடைந்தது. இரு நகரங்களுக்கிடையே நிறுத்தப்பட்டு இயக்கினால் பயணம் 6 மணி நேரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் இந்த மாத இறுதி அல்லது தீபாவளி பண்டிகைக்குள் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையைத் தொடங்க, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ALSO READ:  ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்... ஊ(ட)கத்தனங்கள்!

அகமதாபாத், மும்பை வழித்தடத்தில் ஏற்கெனவே சதாப்தி மற்றும் தேஜஸ் ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன்மூலம் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரமாகக் குறையும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி-புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது. 16 ஏ.சி. பெட்டிகள், நவீன இருக்கைகள், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 பேர் பயணிக்கலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத்ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

images 94

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories